×

வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே சூதாடிய 7 பேர் கைது; பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல்

 

மேட்டுப்பாளையம், ஆக.15: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் சூதாட்டம் நடப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகத்திற்கு கிடைத்த தககவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்றனர். மண்டபம் அருகே உள்ள தனியார் நிலத்தில் சூதாடிய 7 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்த விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கோவை சவுரிபாளையம், உடையாம்பாளையம், காந்திமா நகர், கணபதி மாநகர் பகுதிகளைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (43), ஜெயபிரகாஷ் (42), லட்சுமணன் (41), மணிகண்டன் (28), ராஜா(29), நாகராஜ் (40), மகேஷ்குமார் (38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரத்து 700 பணம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்கள் அடிக்கடி இதுபோன்று மண்டபங்களில் சூதாடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே சூதாடிய 7 பேர் கைது; பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vanabhadrakaliyamman temple ,Mettupalayam ,Sub-Inspector ,Selvanayake ,Vanabhatrakaliamman temple ,
× RELATED தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்;...